குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு


குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:00 PM GMT (Updated: 4 Jan 2020 9:59 PM GMT)

திருப்பரங்குன்றத்தில் குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலக்குயில்குடி ஊராட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ேபாட்டியிட்ட பேச்சி, ஜோதி ஆகிய 2 பேரும் ஓட்டு எண்ணிக்கையில் தலா 85 ஓட்டுகள் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் நேற்று திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

இதில் ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆசிக் 2 சீட்டில் தனித்தனியாக 2 வேட்பாளர்களின் பெயரை எழுதி அதை சுருட்டி அவரே குலுக்கி எடுத்தார். அதில் பேச்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். உடனே ஜோதி சம ஓட்டு வாங்கியவர்களுக்கு சம அளவில் குலுக்கல் சீட்டு தயார்படுத்தவில்லை. ஒரு சீட்டு பெரியதாகவும் மற்றொரு சீட்டு சிறியதாக உருவாக்கி இருந்தது. மேலும் அதை வெளி நபரான மற்றொருவரை எடுக்க சொல்லவில்லை.

வாக்கு எடுப்பில் அதிகாரி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி அவருக்கு வேண்டியவருக்கு சாதமாக செயல்பட்டார் என்று கூறி கண்ணீர் விட்டு தேம்பி, தேம்பி அழுதார். மேலும் அவர் பலத்த குரலுடன் தெய்வம் கேட்கும் என்று சாபமிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திரு நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேட்பாளர் ஜோதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி படுத்தினர்.

Next Story