மராட்டியத்தில் 6 மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி; காங்கிரசுக்கு 2-வது இடம்


மராட்டியத்தில் 6 மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி; காங்கிரசுக்கு 2-வது இடம்
x
தினத்தந்தி 8 Jan 2020 11:57 PM GMT (Updated: 8 Jan 2020 11:57 PM GMT)

நாக்பூர், அகோலா, வாசிம், துலே, நந்தூர்பர், பால்கர் ஆகிய 6 மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள 332 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

மும்பை, 

பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி 103 வார்டுகளை அக்கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் 73 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களிலும், சிவசேனா 49 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதேபோல மேற்கண்ட 6 மாவட்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட 664 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் பாரதீய ஜனதா 194 இடங்களை வென்றது. காங்கிரஸ் 145, தேசியவாத காங்கிரஸ் 80, சிவசேனா 117 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Next Story