புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்


புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:15 PM GMT (Updated: 10 Jan 2020 8:28 PM GMT)

புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

மெக்கா புனித யாத்திரைக்கு செல்பவர்களை ஆன்லைன் குலுக்கல்முறையில்தேர்வு செய்யும் பணி தொடக்க விழா பெங்களூருவில் ஹஜ் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த பணியை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு 6,734 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்துள்ளேன். கலபுரகியில் இருந்து தனி விமானம் மூலம் நேரடியாக மெக்காவுக்கு புறப்பட ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மத்திய விமானத்துறை மந்திரியுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிைடயாது. எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம். முஸ்லிம்களில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட அதற்கு நான் பொறுப்பேற்க தயாராக உள்ளேன்.

ஹஜ் பவனில் புதிய கட்டிம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். வருகிற பட்ஜெட்டில் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். உங்களின் கோரிக்கைகளை 24 மணி நேரத்தில் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதில் பேசிய ஹஜ் கமிட்டி தலைவர் ரோஷன் பெய்க், ‘‘இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து 6,734 பேர் மெக்கா புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்ரீகர்கள் ேதர்வு செய்யப்படுகிறார்கள். யாத்ரீகர்கள், ஐதராபாத்திற்கு சென்று அங்கிருந்து மெக்கா செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் கலபுரகியில் இருந்து நேரடியாக மெக்கா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Next Story