நாமகிரிப்பேட்டை அருகே, புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை


நாமகிரிப்பேட்டை அருகே, புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 6:34 PM GMT)

நாமகிரிப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமகிரிப்பேட்டை,

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி செவ்வாப்பாடிபுதூரை சேர்ந்தவர் சுகனேஸ்வரன் (வயது 25). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த சத்தியா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்றதில் இருந்தே கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சுகனேஸ்வரன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார். திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story