கயர்லாபாத் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


கயர்லாபாத் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Jan 2020 9:30 PM GMT (Updated: 17 Jan 2020 5:25 PM GMT)

அரியலூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரியலூர், 

அரியலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான, கயர்லாபாத், வாலாஜநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரியங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவூர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, ராஜீவ்நகர், கொளப்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story