தனித்தனி சம்பவத்தில் சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை


தனித்தனி சம்பவத்தில் சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 7:19 PM GMT)

தனித்தனி சம்பவத்தில் சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைக் கண்ணு மகள் சரண்யா (வயது17). இவளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த சரண்யா விஷத்தை எடுத்து குடித்துவிட்டாள். இதில் மயங்கி விழுந்த அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சரண்யா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மனைவி சின்னம்மாள் (55). இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story