நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு


நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு
x
தினத்தந்தி 18 Jan 2020 10:15 PM GMT (Updated: 18 Jan 2020 7:05 PM GMT)

நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு.

தா.பேட்டை,

தா.பேட்டை நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 29). இவர் தா.பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக தா.பேட்டை - துறையூர் செல்லும் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். ஆராய்ச்சி சமத்துவபுரம் அருகே அவர் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமார், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story