நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது


நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 8:38 PM GMT)

நாமக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள குட்டையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த கொலை வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த விமல் (வயது 20), மின்னாம்பள்ளியை சேர்ந்த கரடி மணி என்கிற மணிகண்டன் (20) உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கட்டிட மேஸ்திரி கைது

இந்த நிலையில் விமல் மற்றும் 3 சிறுவர்களை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். கட்டிட மேஸ்திரி கரடிமணி என்கிற மணிகண்டனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று புதன்சந்தை பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மணிகண்டனை நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கொலையான நபர் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story