7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் மீது வழக்கு


7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Feb 2020 9:00 PM GMT (Updated: 4 Feb 2020 1:11 PM GMT)

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி கொத்தன்குளம் பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல்(வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது இஸ்ரவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இஸ்ரவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இஸ்ரவேலை தேடி வருகிறார்கள்.

Next Story