கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 9:34 PM GMT)

விழுப்புரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கெண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன் மகன் ஏழுமலை(57). இவர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மணல் திருடி விற்பனை செய்வதும், தடுக்கச் சென்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிப்பதும் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தாராம். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம்

மேலும் அவரது குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அண்ணாதுரை, அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார், ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story