நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி


நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2020 10:45 PM GMT (Updated: 9 Feb 2020 8:58 PM GMT)

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி.

தர்மபுரி,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, மாவட்ட செயலாளர் டாக்டர் முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்ட முடிவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக கவர்னருக்கு அனுப்பி 500 நாட்கள் ஆகியும் இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீண்டும், சட்டசபையில் மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் இது குறித்து கவர்னர் முடிவு எடுக்காவிட்டால் மத்திய அரசு இந்த கவர்னரை திரும்ப பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிராக தர்மபுரி மாவட்டம், சிவாடியில் பெட்ரோல் கிடங்கு அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை தமிழக வாழ்வுரிமை கட்சி அனுமதிக்காது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வருமான வரித்துறையினர் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு நிலைப்பாடும், விஜய்க்கு ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு எங்கள் கட்சியினர் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story