எலச்சிபாளையத்தில் கார் மோதி டிரைவர் பலி


எலச்சிபாளையத்தில் கார் மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2020 10:15 PM GMT (Updated: 9 Feb 2020 9:12 PM GMT)

எலச்சிபாளையத்தில் கார் மோதி லாரி டிரைவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலச்சிபாளையம்,

எலச்சிபாளையம் அகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் எலச்சிபாளையத்தில் இருந்து அகரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று முருகேசன் ஓட்டிச்சென்ற மொபட் மீது பயரங்கமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து டிரைவர் முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரில் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முருகேசனுக்கு, வேலம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அகரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story