குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 10 Feb 2020 10:30 PM GMT (Updated: 10 Feb 2020 7:11 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் ஒன்றியம் புலிவலம் பள்ளிவாசலில் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான தேவா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து போட்டனர்.

இதேபோல் திருவாரூர் புனித பாத்திமா ஆலய வளாகத்தில குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் நகர செயலாளர் பிரகா‌‌ஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் தாஜுதீன், நிர்வாகி ரோலி, ரமே‌‌ஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story