விஷம் கலந்த அரிசியை தின்ற அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை
கோட்டூர் அருகே விஷம் கலந்த அரிசியை தின்ற அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன்கள் கிஷோர் (வயது 8). இவர் 3-ம் வகுப்பும், ஜஸ்வின் (6) 2-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் குமரராஜ் (6) 1-ம் வகுப்பும் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவர்கள், அருகில் உள்ள பாசமலர் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டதால், அவரது வீட்டில் விளையாடி உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்த அரிசியை தின்றுள்ளனர். வேலை முடிந்து வீடு திரும்பிய பாசமலர் வீட்டில் இருந்த பாத்திரங்கள் களைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, விசாரித்ததில் எலிகளை பிடிக்க எலி மருந்து (விஷம்) கலந்து வைத்திருந்த அரிசியை சிறுவர்கள் 3 பேரும் தின்றது தெரியவந்தது.
இதனை அறிந்த சிறுவர்களின் பெற்றோர், அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன்கள் கிஷோர் (வயது 8). இவர் 3-ம் வகுப்பும், ஜஸ்வின் (6) 2-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் குமரராஜ் (6) 1-ம் வகுப்பும் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவர்கள், அருகில் உள்ள பாசமலர் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டதால், அவரது வீட்டில் விளையாடி உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்த அரிசியை தின்றுள்ளனர். வேலை முடிந்து வீடு திரும்பிய பாசமலர் வீட்டில் இருந்த பாத்திரங்கள் களைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, விசாரித்ததில் எலிகளை பிடிக்க எலி மருந்து (விஷம்) கலந்து வைத்திருந்த அரிசியை சிறுவர்கள் 3 பேரும் தின்றது தெரியவந்தது.
இதனை அறிந்த சிறுவர்களின் பெற்றோர், அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story