தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்


தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Feb 2020 9:30 PM GMT (Updated: 13 Feb 2020 12:53 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

வள்ளியூர், 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

மின்உற்பத்தி நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தினமும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி பராமரிப்பு பணிக்காக 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் முதலாவது அணு உலையில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வந்தது. முதலாவது அணுஉலையில் 980 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்ற வந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் முதலாவது அணுஉலையிலும் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

2 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு

தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணுஉலைகளிலும் உற்பத்தி நடைபெறாததால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story