ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து


ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Feb 2020 9:30 PM GMT (Updated: 13 Feb 2020 1:26 PM GMT)

நாகர்கோவிலில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

நாகர்கோவில், 

நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்தவர் மணி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், வெட்டூர்ணிமடத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த ஏ.சி., மற்றும் மேஜைகள் தீயில் எரிந்து நாசம் ஆகின. மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட அலுவலகம் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் இருப்பதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story