சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 14 Feb 2020 8:30 PM GMT (Updated: 14 Feb 2020 12:26 PM GMT)

திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியில் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். 

அப்போது அந்த பகுதியை சேர்ந்த செல்வி (வயது 50) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் கள்ளத்தனமாக சாராய விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story