8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது


8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2020 9:45 PM GMT (Updated: 14 Feb 2020 2:40 PM GMT)

வெள்ளமடம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

ஆரல்வாய்மொழி, 

வெள்ளமடம் அருகே சகாயநகர் சர்ச் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (வயது 56), பெயிண்டர். இவர் 8 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து செல்வராஜை பிடித்து ஆரல்வாய்மொழி போலீசில் ஒப்படைத்தனர். 

ஆரல்வாய்மொழி போலீசார் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

Next Story