திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு


திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு
x
தினத்தந்தி 17 Feb 2020 10:45 PM GMT (Updated: 17 Feb 2020 8:09 PM GMT)

திருவேங்கடம் அருகே சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவேங்கடம், 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மகன் அஜய் (வயது 16). இவர் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். அஜய் பாடங்களை சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காளிராஜ், அஜயை சரியாக படிக்குமாறு கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அஜய் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story