தேன்கனிக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பூதட்டிக்கொட்டாயை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி சந்தியா (வயது 20). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன் சந்தியா ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின் அவரது குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா விஷ மருந்தை தின்று மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சந்தியா உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொைல செய்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் குமரேசனும் விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பூதட்டிக்கொட்டாயை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி சந்தியா (வயது 20). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன் சந்தியா ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின் அவரது குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா விஷ மருந்தை தின்று மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சந்தியா உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொைல செய்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் குமரேசனும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story