தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2020 9:30 PM GMT (Updated: 22 Feb 2020 1:15 PM GMT)

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி தற்கொலை 

தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 31). உப்பள தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி. மணிகண்டனுக்கு சரியாக வேலை கிடைக்கவில்லையாம். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம் 

தூத்துக்குடி பூபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சுடலை. இவருடைய மகன் பார்வதிநாதன் (வயது 36). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இதனை அவருடைய குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பார்வதிநாதன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story