சேலம் அருகே பயங்கரம் கார் பட்டறை அதிபர் கழுத்தை அறுத்து கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சேலம் அருகே கார் பட்டறை அதிபர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பனமரத்துப்பட்டி,
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள மூக்குத்திபாளையம் கிராமம் அய்யனாரப்பன் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் மகேஷ் (வயது 32). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சொந்தமாக கார் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ், அம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மூக்குத்திபாளையம் பெத்தான் காடு தாழம்பூ ஏரிக்கரை பகுதி அருகே வந்தபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் மகேசின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர்.
கழுத்தை அறுத்து கொலை
பின்னர் அந்த மர்ம நபர்கள் மகேசை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது கத்தியால் அவரது கழுத்தை அறுத்து உள்ளனர். இதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பிறகு அந்த வழியாக வந்த பொதுமக்கள் மகேஷ் இறந்து கிடப்பதை கண்டு மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார் மகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? வேறு ஏதாவது காரணங்களுக்காக மகேஷ் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மகேசை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கார் பட்டறை அதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள மூக்குத்திபாளையம் கிராமம் அய்யனாரப்பன் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் மகேஷ் (வயது 32). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சொந்தமாக கார் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ், அம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மூக்குத்திபாளையம் பெத்தான் காடு தாழம்பூ ஏரிக்கரை பகுதி அருகே வந்தபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் மகேசின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர்.
கழுத்தை அறுத்து கொலை
பின்னர் அந்த மர்ம நபர்கள் மகேசை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது கத்தியால் அவரது கழுத்தை அறுத்து உள்ளனர். இதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பிறகு அந்த வழியாக வந்த பொதுமக்கள் மகேஷ் இறந்து கிடப்பதை கண்டு மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார் மகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? வேறு ஏதாவது காரணங்களுக்காக மகேஷ் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மகேசை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கார் பட்டறை அதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story