திருத்துறைப்பூண்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவிகள், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1436 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு கடந்த 2 ஆண்டு களாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை எனவும், உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்தக்கோரியும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்து குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பிய அவர்கள் அனைவரும் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருத்துறைப்பூண்டியில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1436 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு கடந்த 2 ஆண்டு களாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை எனவும், உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்தக்கோரியும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்து குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பிய அவர்கள் அனைவரும் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story