சமூகவலைதளத்தை மோடியின் பக்தர்கள் கைவிட்டால் நாடு அமைதியடையும்; தேசியவாத காங்கிரஸ் கிண்டல்


சமூகவலைதளத்தை மோடியின் பக்தர்கள் கைவிட்டால் நாடு அமைதியடையும்; தேசியவாத காங்கிரஸ் கிண்டல்
x
தினத்தந்தி 3 March 2020 10:48 PM GMT (Updated: 3 March 2020 10:48 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளில் இருந்து விலக யோசித்து வருவதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மும்பை, 

பிரதமரின் இந்த முடிவை வரவேற்பதாக தேசியவாத காங்கிரஸ் கிண்டல் செய்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியை சேர்ந்த மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக ஊடகங்களை கைவிடுவதற்கான குறிப்பை தெரிவித்தார். அவரது அனைத்து பக்தர்களும் அதை கைவிட்டால் நாடு அமைதியடையும். மோடியின் முடிவு நாட்டின் நலனுக்காக இருக்கும். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story