திருவள்ளூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வி துறை மற்றும் காவல்துறை இணைந்து மாணவர் காவல்படையைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகள் கபடி, 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆண் மற்றும் பெண்கள் இருபாலரும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு, திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story