பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்; வாலிபர் கைது


பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 March 2020 10:44 PM GMT (Updated: 6 March 2020 10:44 PM GMT)

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கல்பனா. இவர் நேற்று நல்லம்பள்ளி பகுதியில் ஒரு வாகன விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டிருந்தார். அப்போது கொங்கரப்பட்டியை சேர்ந்த மாதேஷ் (வயது 23) என்ற வாலிபர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்பனா இதுபற்றி அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர்.

Next Story