சமூக வலைத்தளத்தில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட டிரைவர் கைது
பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
நான் கடந்த 2011-ம் ஆண்டு கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தேன். அப்போது எங்களது வீட்டின் அருகே ராஜா (வயது 47) என்ற கால் டாக்சி டிரைவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரிடம் நாங்கள் நட்பாக பழகி வந்தோம்.
இந்த நிலையில் ராஜா, என் மனைவியிடம் செல்போன் இல்லை. நான் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வதால் என் மனைவியிடம் பேச உங்களின் செல்போன் எண்ணை கொடுங்கள் என்று என்னிடம் கேட்டு வாங்கினார்.
பணம் கேட்டு மிரட்டல்
முதலில் சரியாக பேசி வந்த ராஜா பின்னர் என்னிடம் தவறாக பேசினார். இதை நான் கண்டித்தேன். ஆனாலும் ராஜா என்னிடம் கணவரை விட்டு வந்து விடு நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். நான் மறுத்து வந்தேன். இதற்கிடையே ஒரு நாள் தனியாக பேச வேண்டும் என்று கூறி என்னை வெளியே அழைத்து சென்றார்.
அப்போது என்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை செல்போனில் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு என்னை அடிக்கடி மிரட்டினார். இதனால் பயந்து போன நான் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு வந்து குடியேறினேன்.
ஆபாச படம் பதிவேற்றம்
அதன்பிறகும் விடாமல் ராஜா, என்னை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி மிரட்டி வந்தார். இதையடுத்து எனது முகவரியை தெரிந்து கொண்டு கோவையில் உள்ள எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு ராஜா மிரட்டினார். பணம் தராவிட்டால், நாம் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டினார். நான் பணம் கொடுக்க மறுத்து வந்ததால் ராஜா என்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
நான் கடந்த 2011-ம் ஆண்டு கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தேன். அப்போது எங்களது வீட்டின் அருகே ராஜா (வயது 47) என்ற கால் டாக்சி டிரைவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரிடம் நாங்கள் நட்பாக பழகி வந்தோம்.
இந்த நிலையில் ராஜா, என் மனைவியிடம் செல்போன் இல்லை. நான் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வதால் என் மனைவியிடம் பேச உங்களின் செல்போன் எண்ணை கொடுங்கள் என்று என்னிடம் கேட்டு வாங்கினார்.
பணம் கேட்டு மிரட்டல்
முதலில் சரியாக பேசி வந்த ராஜா பின்னர் என்னிடம் தவறாக பேசினார். இதை நான் கண்டித்தேன். ஆனாலும் ராஜா என்னிடம் கணவரை விட்டு வந்து விடு நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். நான் மறுத்து வந்தேன். இதற்கிடையே ஒரு நாள் தனியாக பேச வேண்டும் என்று கூறி என்னை வெளியே அழைத்து சென்றார்.
அப்போது என்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை செல்போனில் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு என்னை அடிக்கடி மிரட்டினார். இதனால் பயந்து போன நான் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு வந்து குடியேறினேன்.
ஆபாச படம் பதிவேற்றம்
அதன்பிறகும் விடாமல் ராஜா, என்னை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி மிரட்டி வந்தார். இதையடுத்து எனது முகவரியை தெரிந்து கொண்டு கோவையில் உள்ள எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு ராஜா மிரட்டினார். பணம் தராவிட்டால், நாம் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டினார். நான் பணம் கொடுக்க மறுத்து வந்ததால் ராஜா என்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story