காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்
காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதியில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓமன் நாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
என்ஜினீயரின் உறவினர், நண்பர்கள் என 22 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு மருத்துவ குழுவினர் சிறப்பு பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியானது. 22 பேரும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓமன் நாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
என்ஜினீயரின் உறவினர், நண்பர்கள் என 22 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு மருத்துவ குழுவினர் சிறப்பு பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியானது. 22 பேரும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story