குற்றவாளியுடன் தொடர்பு வைத்ததாக புகார் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
குற்றவாளியுடன் தொடர்பு வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்சீலி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 58). இவர் அ.தி.மு.க. மண்ணச்சநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும், கூட்டுறவு சங்க துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இவர் திருப்பைஞ்சீலி கடை வீதியில் கோவில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி இவரது கடையில் 2 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பைஞ்சீலியை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா அரியநாதன், கண்ணன், உளுந்தங்குடி பாளையநல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
இந்தநிலையில் அரியநாதனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மீது பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரையின்பேரில், நேற்று முன்தினம் இரவு இம்மானுவேல் ராயப்பனை அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து, திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கரூர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்சீலி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 58). இவர் அ.தி.மு.க. மண்ணச்சநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும், கூட்டுறவு சங்க துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இவர் திருப்பைஞ்சீலி கடை வீதியில் கோவில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி இவரது கடையில் 2 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பைஞ்சீலியை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா அரியநாதன், கண்ணன், உளுந்தங்குடி பாளையநல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
இந்தநிலையில் அரியநாதனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மீது பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரையின்பேரில், நேற்று முன்தினம் இரவு இம்மானுவேல் ராயப்பனை அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து, திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கரூர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story