‘பார்’ ஊழியர் வெட்டிக்கொலை: 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


‘பார்’ ஊழியர் வெட்டிக்கொலை: 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 March 2020 11:00 PM GMT (Updated: 12 March 2020 8:50 PM GMT)

‘பார்’ ஊழியர் வெட்டிக்கொலை: 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.

தேவூர்,

தேவூர் அருகே உள்ளதண்ணீர்தாசனூர் பகுதியில்செயல்படும்அரசு மதுபானக்கடைபாரில்,ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 30), அண்ணாமலை ஆகியோர் ஊழியர்களாக வேலைபார்த்துவந்தனர்.நேற்றுமுன்தினம்மதியம் பூமணியூரை சேர்ந்தகூலித்தொழிலாளியானதுரைராஜ்என்பவர் மதுபான பாருக்கு வந்தார். அப்போது அவருக்கும், ஊழியர்களான அண்ணாமலை, ராமமூர்த்திக்கும் இடையே தகராறுஏற்பட்டது. இதையொட்டி அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் இரவுதுரைராஜ்உள்பட 7 பேர் மீண்டும் அங்கு வந்தனர்.அவர்கள்ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டினார்கள்.இதில் பலத்த காயம் அடைந்த ராமமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணாமலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெற்று வருகிறார்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ேமலும் சங்ககிரி போலீஸ் துைண சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தப்பி ஓடிய துரைராஜ், தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த மகேந்திரன், செல்லப்பாளையத்தை சேர்ந்த வாசுதேவன் உள்பட 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story