திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ


திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ
x
தினத்தந்தி 8 April 2020 10:15 PM GMT (Updated: 8 April 2020 9:47 PM GMT)

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன.

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல புதிய படிக்கட்டு பாதை உள்ளது. இந்த பாதை அருகே மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. மேலும் கிரிவலபாதை அருகே ரோட்டின் ஓரமாக இருந்த சருகுகளும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக மலையில் உள்ள சருகுகள் மீது தீப்பற்றி எரிய காரணம் என்ன? மர்ம நபர்கள் யாரும் தீ வைத்து விட்டார்களா என்று திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story