நாகை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 35 பேர் குணமடைந்துள்ளனர் கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்


நாகை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 35 பேர் குணமடைந்துள்ளனர் கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்
x
தினத்தந்தி 1 May 2020 11:44 PM GMT (Updated: 1 May 2020 11:44 PM GMT)

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 44 பேரில் இதுவரை 35 பேர் குணமடைந்துள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 44 பேரில் இதுவரை 35 பேர் குணமடைந்துள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்த மாதிரி பரிசோதனை

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என சந்தேகத்தின்படி, இதுவரை 1,666 பேரின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் திருவாரூரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

35 பேர் குணமடைந்துள்ளனர்

மேலும், காசிக்கு சென்று திரும்பிய வேளாங்கண்ணியை சேர்ந்த ஒரு நபருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது. இந்த இரண்டு நபர்களையும் சேர்த்து இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 35 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,605 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 19 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story