சேலத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை


சேலத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 4 May 2020 10:45 PM GMT (Updated: 4 May 2020 8:41 PM GMT)

சேலத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்வி, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி மூலம் காய்ச்சல் ஏதேனும் இருக்கிறதா? என பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல் இருக்கிறதா? என்பதை அறிய உதவும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமும் பரிசோதனை நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகளும், அலுவலக ஊழியர்களும் அனைவரும் வரிசையாக காத்திருந்து பரிசோதனை செய்த பிறகே அவர்களது அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Next Story