புளிச்சப்பள்ளம் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு


புளிச்சப்பள்ளம் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 May 2020 10:12 PM GMT (Updated: 9 May 2020 10:12 PM GMT)

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா புளிச்சப்பள்ளம் கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்களா? என்று பார்வையிட்டார். மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிபந்தனையின்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story