வேப்பூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வேப்பூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2020 10:01 PM GMT (Updated: 10 May 2020 10:01 PM GMT)

கடலூர் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர்களின் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் வேப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேப்பூர்,

கடலூர் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர்களின் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் வேப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி முதல் 12 மணி நேரமாக உயர்த்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தேசிங்கு, கோட்ட தலைவர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், இணை செயலாளர் சேகர், பொருளாளர் வீராசாமி, செயற்குழு தண்டபாணி, கண்ணுசாமி, கொளஞ்சி, சிந்தாமணி, மனோகரன், மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story