பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி


பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 12 May 2020 9:43 PM GMT (Updated: 12 May 2020 9:43 PM GMT)

பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.

விருத்தாசலம்,

பண்ருட்டி அருகே உள்ள வேலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி பாக்கியவதி, இவருடைய மகன் ராஜசேகர் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தல்படியும், எம்.சி.எஸ்.பிரவீன் ஆலோசனையின் பேரிலும் காடாம்புலியூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், கூட்டுறவு சங்க தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான கி.தேவநாதன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் மாவட்ட கவுன்சிலர் பெருமாள், காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்க தலைவருமான கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் இந்திரா வடிவேல், சிறப்பு காவல் பிரிவு பலராமன், கிளை செயலாளர் சிவக்குமார், தமிழ்அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story