நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 335 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 335 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 15 May 2020 3:43 AM GMT (Updated: 15 May 2020 3:43 AM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 335 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 325 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 335 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-355, ஐதராபாத்-315, விஜயவாடா-320, மைசூரூ-335, மும்பை-350, பெங்களூரு-330, கொல்கத்தா-360, டெல்லி-295.

கறிக்கோழி

கறிக்கோழி கிலோ ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.128 ஆக அதிகரித்து உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆக அதிகரித்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் அதிகரித்து 335 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 

Next Story