வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2020 12:30 AM GMT (Updated: 20 May 2020 12:30 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 24). தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை சஞ்சயின் தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குருபரப்பள்ளியை அடுத்த சின்னகுந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ்வரன்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கு உத்தரவால் ஊருக்கு வந்த லோகேஷ்வரனுக்கும், அவரது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தேன்கனிக்கோட்டை பட்டாளம்மான் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). தொழிலாளி. மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்ததை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story