பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் ஈழுவா-தியா சமுதாய மக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் ஈழுவா-தியா சமுதாய மக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 6:08 AM GMT (Updated: 21 May 2020 6:08 AM GMT)

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு, 

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கோரி அரசாணை வெளியிடப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழுவிற்கு கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் வருகிற 26-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அல்லது குழுவின் உறுப்பினர் -செயலாளர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குனர், எழிலகம் விரிவாக்க கட்டிடம், 2-ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக அல்லது dbcwoerd@gmail.com, dircombc@tn.gov.in, dirbcmw@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story