571 பேர் குணம் அடைந்தனர் கர்நாடகத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு


571 பேர் குணம் அடைந்தனர் கர்நாடகத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 May 2020 11:45 PM GMT (Updated: 21 May 2020 9:27 PM GMT)

கர்நாடகத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 571 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 1,420 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 143 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,563 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 42 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 571 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 992 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களுரு நகரில் 6 பேர், மண்டியாவில் 33 பேர், பெலகாவியில் 9 பேர், தாவணகெரேயில் 3 பேர், மைசூருவில் ஒருவர், ஹாசனில் 13 பேர், உத்தர கன்னடாவில் 7 பேர், விஜயாப்புராவில் ஒருவர், தட்சிண கன்னடாவில் 5 பேர், உடுப்பியில் 26 பேர், தார்வாரில் 5 பேர், சிவமொக்காவில் 6 பேர், பல்லாரியில் 11 பேர், சிக்பள்ளாப்பூரில் 2 பேர், கதக்கில் 2 பேர், துமகூருவில் ஒருவர், ராய்ச்சூரில் 5 பேர், கோலாரில் 2 பேர், மற்றவர்கள் 5 பேர் ஆவார்கள்.

மாநிலத்தில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கையில் பெங்களூரு நகரில் 246 பேர், மண்டியாவில் 201 பேர், கலபுரகியில் 127 பேர், பெலகாவியில் 124 பேர், தாவணகெரேயில் 111 பேர், மைசூருவில் 90 பேர், பாகல்கோட்டையில் 75 பேர், பீதரில் 65 பேர், ஹாசனில் 66 பேர், உத்தர கன்னடாவில் 63 பேர், விஜயாப்புராவில் 57 பேர், தட்சிண கன்னடாவில் 48 பேர், உடுப்பியில் 46 பேர், தார்வாரில் 31 பேர், சிவமொக்காவில் 30 பேர், பல்லாரியில் 30 பேர், சிக்பள்ளாப்பூரில் 24 பேர், கதக்கில் 19 பேர், துமகூருவில் 14 பேர், ராய்ச்சூரில் 16 பேர், யாதகிரியில் 13 பேர், கோலாரில் 11 பேர், சித்ரதுர்காவில் 10 பேர், பெங்களூரு புறநகரில் 6 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், ஹாவேரியில் 3 பேர், கொப்பலில் 3 பேர், குடகில் 2 பேர், மற்றவர்கள் 29 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 7,516 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் அதிகபட்சமாக சில நாட்களுக்கு முன்பு 149 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் அந்த எண்ணிக்கையை நெருங்கும் அளவுக்கு ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story