தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 12:30 AM GMT (Updated: 22 May 2020 12:30 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி பொதுச் செயலாளர் ரொனால்டு வில்லவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

ஏரல் மணிக்கூண்டு அருகில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story