தொட்டியம் அருகே 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


தொட்டியம் அருகே 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2020 4:13 AM GMT (Updated: 22 May 2020 4:13 AM GMT)

தொட்டியம் அருகே, 2 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டியம்.

தொட்டியம் அருகே, 2 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மர்ம சாவு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள காடுவெட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன். தையல் தொழிலாளி. இவருக்கும், கரூரை சேர்ந்த ஹர்ஷவர்த்தினி என்கிற நவீனா(வயது 29) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை நவீனா, வீட்டில் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு மர்மமான முறையில் பிணமாக கிடப்பதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இந்நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக நவீனாவின் தாய் லீலாவதி கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு நவீனா கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story