விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2020 3:58 AM GMT (Updated: 29 May 2020 3:58 AM GMT)

ரிஷிவந்தியம் அருகே வாணாபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரிஷிவந்தியம்,

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மணிகண்டன், சாமிநாதன், ஏழுமலை, வேல்முருகன், சுரேஷ்குமார், பிரேம்குமார் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மொத்தம் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story