கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கணவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சங்ககிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி கோத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவரது மகள் சந்திரிகா (19). இவருக்கும், தேர்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடர்ந்து அவர்கள் தேர்பேட்டையில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜோதிடரிடம் சென்று சந்திரிகாவுக்கு ஜாதகம் பார்த்தனர். அப்போது ஜாதகம் சரியில்லை, வேறு ஒரு ஊருக்கு சென்று வசிக்கும்படி ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சங்ககிரிக்கு வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் 2 பேரும் கடந்த சில நாட்களாக வசித்து வந்தனர்.
மேலும் மணிகண்டன் சங்ககிரியில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக மணிகண்டன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்திரிகா மனஉளைச்சல் அடைந்தால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சந்திரிகா, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரிகா பரிதாபமாக இறந்தார்.
தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி கோத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவரது மகள் சந்திரிகா (19). இவருக்கும், தேர்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடர்ந்து அவர்கள் தேர்பேட்டையில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜோதிடரிடம் சென்று சந்திரிகாவுக்கு ஜாதகம் பார்த்தனர். அப்போது ஜாதகம் சரியில்லை, வேறு ஒரு ஊருக்கு சென்று வசிக்கும்படி ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சங்ககிரிக்கு வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் 2 பேரும் கடந்த சில நாட்களாக வசித்து வந்தனர்.
மேலும் மணிகண்டன் சங்ககிரியில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக மணிகண்டன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்திரிகா மனஉளைச்சல் அடைந்தால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சந்திரிகா, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரிகா பரிதாபமாக இறந்தார்.
தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.
Related Tags :
Next Story