சின்னசேலம் ; வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது


சின்னசேலம்  ; வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2020 4:38 AM GMT (Updated: 5 Jun 2020 4:38 AM GMT)

சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரகு (வயது 24), அதே கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23).

சின்னசேலம்,

நண்பர்களான இவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கார்த்திக் தனது ஆதரவாளரான அதே பகுதியை சேர்ந்த பசுபதி என்பவருடன் சேர்ந்து கொண்டு ரகுவை கத்தியால் குத்தியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த ரகு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் பசுபதியை தேடி வருகின்றனர்.

Next Story