தர்மபுரி : ஊரடங்கு உத்தரவை மீறிய 70 பேர் கைது


தர்மபுரி : ஊரடங்கு உத்தரவை மீறிய 70 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2020 3:04 AM GMT (Updated: 11 Jun 2020 3:04 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் என 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். 

Next Story