சிவகங்கை மாவட்டத்தில், ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா


சிவகங்கை மாவட்டத்தில், ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jun 2020 10:15 PM GMT (Updated: 24 Jun 2020 4:46 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஆண் உள்பட 17 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து வந்த மண்ணடியை சேர்ந்த 60 வயது ஆண், சூளைமேட்டை சேர்ந்த ஒரு ஆண், போரூரை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், முகப்பேரை சேர்ந்த தந்தை மற்றும் அவரது மகளுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஒரு பெண், தேவகோட்டை அருகே உள்ள திராணி கிராமத்தில் ஒரு ஆண் மற்றும் சண்முகநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரையை அடுத்த கீழக்கண்டனி மற்றும் சுந்தரநடப்பில் 2 பெண்கள், கல்லலில் 4 ஆண் மற்றும் ஒரு பெண், காரைக்குடி அமராவதி புதூரில் ஒரு ஆண் உள்பட 17 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Next Story