உளுந்தூர்பேட்டை அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - மாமியார் மீது வழக்கு


உளுந்தூர்பேட்டை அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - மாமியார் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Jun 2020 10:45 PM GMT (Updated: 1 July 2020 8:55 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி வினோதினி (வயது 20). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த நிலையில் வினோதினிக்கும் ஏழுமலையின் தாயார் அன்னபாக்கியத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த வினோதினி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து வினோதினியின் தாய் தனகோடி எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் எனது மகளுடன், அவரது மாமியார் அன்னபாக்கியம் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதில் மனமுடைந்த எனது மகள் வினோதினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் அன்னபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story