அச்சரப்பாக்கம், காயரம்பேட்டில் இன்று மின் தடை


அச்சரப்பாக்கம், காயரம்பேட்டில் இன்று மின் தடை
x
தினத்தந்தி 4 July 2020 12:25 AM GMT (Updated: 4 July 2020 12:25 AM GMT)

அச்சரப்பாக்கம், காயரம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் கோட்ட மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சரப்பாக்கம், ராமாபுரம், ஒரத்தி, பொலம்பாக்கம், நுகும்பல், மேல்மருவத்தூர், சித்தாமூர், தொழுப்பேடு, எண்டத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் ராங்காஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மறைமலைநகர் உட்கோட்டம் நெல்லிக்குப்பம் துணை மின் நிலையம் மற்றும் காயரம்பேடு பீடரில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே காயரம்பேடு, மேல் கால்வாய், கீழ் கால்வாய், பாண்டூர், கன்னிவாக்கம், அஸ்தினாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Next Story