கொரோனா தொற்று பரவல் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 274 ஆக அதிகரிப்பு கோடம்பாக்கம் மண்டலத்தில் 124 தெருக்களுக்கு ‘சீல்’


கொரோனா தொற்று பரவல் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 274 ஆக அதிகரிப்பு கோடம்பாக்கம் மண்டலத்தில் 124 தெருக்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 8 July 2020 9:21 PM GMT (Updated: 8 July 2020 9:21 PM GMT)

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது.

சென்னை,

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே 158 பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 124 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.

Next Story